close
Choose your channels

மனைவியுடன் செல்பி எடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்: '25+1' ஸ்பெஷல் தினமாம்!

Friday, March 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ராபானு அவர்களுடன் செல்பி எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். மேலும் அந்த பகுதியில் ‘25+1’ என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ராபானு திருமணம் கடந்த 1997ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி நடந்தது. இதையடுத்து இன்று ஏ.ஆர்.ரஹ்மான்-சாய்ராபானு தம்பதியின் 25 வது திருமண நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது என்பதனை குறிப்பிடும் வகையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் ‘25+1’ என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவருடைய இந்த பதிவுக்கு சுமார் 3 லட்சம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1992ஆம் ஆண்டு ‘ரோஜா’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான் முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றார் என்பதும், அதன்பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற படத்தில் சிறப்பாக இசையமைத்ததற்காக ஆஸ்கார் விருதை வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தனுஷின் ‘அட்ராங்கே ரே’, மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’, கெளதம் மேனனின் ‘நதிகளில்யே நீராடும் சூரியன்’ உள்பட பல படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.