close
Choose your channels

500 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தில் இசையமைக்கும் ஏஆர் ரஹ்மான்? படப்பிடிப்பு தொடக்கம்..!

Friday, April 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது.

இதிகாச புராணங்களில் ஒன்றான ’ராமாயணம்’ படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

இந்த படத்தில் ராமர் கேரக்டரில் நடிக்கும் ரன்பீர் கபூர் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோவை வெளியிட்டு ராமாயணம் படத்திற்காக போடப்பட்ட செட்டை காண்பித்துள்ளார். மேலும் படப்பிடிப்பின் முதல் நாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை அடுத்து நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக தெரிகிறது.

ராமர் கேரக்டரில் ரன்பீர் கபூர், சீதை கேரக்டரில் சாய் பல்லவி மற்றும் ராவணன் கேரக்டரில் யாஷ் நடிக்கும் இந்த படம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருவதாகவும் தற்போது போடப்பட்டிருக்கும் செட் மட்டுமே 11 கோடி மதிப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் ஆகிய இருவரும் இணைந்து இசையமைப்பார் என்றும் கூறப்படுகிறது.

இந்த படம் மூன்று பாகமாக உருவாக இருப்பதாகவும் ராமரின் இளமை பருவம், சீதை திருமணம், அதன் பின்னர் சீதை இலங்கைக்கு கடத்தல் ஆகியவை மூன்று பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய திரை உலகில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.