ஆடி காரில் வந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஏஆர் ரஹ்மான்: காரணம் இதுதான்..!

  • IndiaGlitz, [Tuesday,February 27 2024]

சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்ய ஆடி காரில் வந்த ஏஆர் ரஹ்மான் வீட்டிற்கு திரும்பும் போது ஆட்டோவில் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை அண்ணா சாலை தர்காவில் இன்று சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றதை அடுத்து அதில் கலந்து கொள்ள தனது விலை உயர்ந்த ஆடிக்காரில் ஏஆர் ரஹ்மான் வருகை தந்தார். அவருக்கு தர்கா சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் அங்கு நடந்த சிறப்பு பிரார்த்தனையில் அவர் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் ஏஆர் ரஹ்மான் அண்ணாசாலை தர்காவுக்கு வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அங்கு கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பிரார்த்தனை முடித்துவிட்டு வீடு திரும்ப தர்காவை விட்டு ஏஆர் ரஹ்மான் வெளியே வந்தபோது ரசிகர்கள் கூட்டம் அதிகமானதால் வேறு வழியின்றி அவர் பின்புறம் வழியாக ஆட்டோவில் ஏறி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை ஆட்டோவில் சென்று அதன் பிறகு அவர் தனது காரில் ஏறி சென்றதாக கூறப்படுகிறது.

ஏஆர் ரஹ்மானை பார்க்க ஏராளமான ரசிகர்கள் திடீரென கூடியதால் அண்ணா சாலை தர்கா அருகே சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

More News

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தில் இணையும் 'ஜெய ஜெய ஜெய ஜெயஹே' நாயகி..!

பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாக இருக்கும் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 15ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

வெறும் 50 ஆயிரம் ரூபாயில் சின்மயி பிரச்சனையை முடித்த லோகேஷ் கனகராஜ்.. எப்படி தெரியுமா?

வெறும்  50 ஆயிரம் ரூபாயில் சின்மயி குறித்த பிரச்சனையை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முடித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்னால் 20 நிமிடம் கூட இருக்க முடியவில்லை.. அவர் எப்படி 11 வருடங்கள் இருந்தாரோ? பிரபல இயக்குனர்..!

சாவர்க்கர் இருந்த சிறையில் என்னால் 20 நிமிடங்கள் கூட இருக்க முடியவில்லை என்றும் அவர் எப்படி 11 வருடங்கள் அந்த சிறையில் இருந்தார் என்றே தெரியவில்லை என்றும் சாவர்க்கர் வாழ்க்கை

அந்த பக்கம் ராமர் கோவில், சசிகலா.. இந்த பக்கம் ஸ்டாலின், கீ வீரமணி.. எல்லா பக்கமும்  ரவுண்டு கட்டும் ரஜினி..!

ஒரு பக்கம் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு சென்ற ரஜினிகாந்த், அதனை அடுத்த சில நாட்களில் சசிகலாவின் புதிய வீட்டிற்கு சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த முறை சிறப்பு தோற்றத்தில் யாரும் கிடையாது: பிரபல ஹீரோவிடம் கதை கூறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த 'லால் சலாம்' திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்த நிலையில் அந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.