close
Choose your channels

ஆடி காரில் வந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஏஆர் ரஹ்மான்: காரணம் இதுதான்..!

Tuesday, February 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்ய ஆடி காரில் வந்த ஏஆர் ரஹ்மான் வீட்டிற்கு திரும்பும் போது ஆட்டோவில் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை அண்ணா சாலை தர்காவில் இன்று சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றதை அடுத்து அதில் கலந்து கொள்ள தனது விலை உயர்ந்த ஆடிக்காரில் ஏஆர் ரஹ்மான் வருகை தந்தார். அவருக்கு தர்கா சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் அங்கு நடந்த சிறப்பு பிரார்த்தனையில் அவர் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் ஏஆர் ரஹ்மான் அண்ணாசாலை தர்காவுக்கு வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அங்கு கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பிரார்த்தனை முடித்துவிட்டு வீடு திரும்ப தர்காவை விட்டு ஏஆர் ரஹ்மான் வெளியே வந்தபோது ரசிகர்கள் கூட்டம் அதிகமானதால் வேறு வழியின்றி அவர் பின்புறம் வழியாக ஆட்டோவில் ஏறி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை ஆட்டோவில் சென்று அதன் பிறகு அவர் தனது காரில் ஏறி சென்றதாக கூறப்படுகிறது.

ஏஆர் ரஹ்மானை பார்க்க ஏராளமான ரசிகர்கள் திடீரென கூடியதால் அண்ணா சாலை தர்கா அருகே சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.