'புலி' பட ரிலீஸை பட்டாசு வெடித்து கொண்டாடிய பிரபல பெண் தயாரிப்பாளர்

  • IndiaGlitz, [Wednesday,September 30 2015]

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் அனைத்து தடைகளையும் தாண்டி முதல்காட்சி அனைத்து நகரங்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. முதல்காட்சியை விஜய் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.

இந்நிலையில் 'புலி' பட ரிலீசை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாதி அவர்கள் இன்று ஏஜிஎஸ் திரையரங்கு முன் பட்டாசு வெடித்து 'புலி' படத்தின் முதல்நாள் முதல் காட்சியை கொண்டாடினார். அவர் பட்டாசு வெடிக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்புடன் வலம் வந்து கொண்டிருக்கின்றது.

மேலும் புலி படத்தின் ரிலீஸுக்கு முன்னணி நடிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 'புலி' படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனையை விஜய் அவர்களே நேரடியாக தலையிட்டு முடிவுக்கு கொண்டு வந்ததற்காக விஜய்க்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்து கொண்டனர்.

More News

'புலி' அதிகாலை காட்சி ரத்து? விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் இன்றைய அதிகாலை 12 மணி காட்சி மற்றும் 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...

கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி' பர்ஸ்ட் லுக், ரிலீஸ் தேதி?

பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வந்த மூன்றாவது படமான 'இறைவி' ...

'வேதாளம்' படத்தின் மூலம் மீண்டும் அஜீத்துடன் இணைந்த பிரபலம்

அஜீத் நடித்த 'பில்லா' மற்றும் 'ஆரம்பம்' ஆகிய படங்களில் அவர் மிகவும் ஸ்டைலிஷான காஸ்ட்யூமில் தோன்றியிருந்ததாக பல விமர்சனங்களில் நாம் பார்த்ததை மறந்திருக்க மாட்டோம்...

சத்யம் சினிமாஸ் திரையரங்கில் 'புலி'யின் புதிய் சாதனை

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' படத்தின் ஒவ்வொரு சாதனையும் வியக்கத்தக்க வகையில் இருந்து வருகிறது....

'புலி' ஒரு முழுமையான விஜய் படம். சிம்புதேவன் பேட்டி

இந்த படத்தின் கதையை நான் விஜய் சாரிடம் சொன்னபோது அவர் கதையின் மீது உள்ள நம்பிக்கையில் நடிக்க ஒப்புக்கொண்டார்...