close
Choose your channels

'புலி' அதிகாலை காட்சி ரத்து? விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

Wednesday, September 30, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் இன்றைய அதிகாலை 12 மணி காட்சி மற்றும் 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி காட்சி குறித்தும் உறுதியான தகவல்கள் இன்னும் வரவில்லை.

நேற்று புலி' படக்குழுவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தியதால் 'புலி' படத்தை வெளியிடுவதில் பொருளாதார பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதனால் லேப்பில் இருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் லேப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இன்னும் ஒருசில மணி நேரங்களில் இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்து 'புலி' படம் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

'புலி' படத்தை முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ஆவலுடன் இருந்த விஜய் ரசிகர்களுக்கு அதிகாலை காட்சி ரத்தானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் முக்கிய நகரங்களில் தியேட்டர் வாசலில் ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் குவிந்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.