நீட் தேர்வுக்கு இரண்டாவது பலி: தேர்வு எழுதிய பின் தற்கொலை செய்து கொண்ட மாணவி!

  • IndiaGlitz, [Tuesday,September 14 2021]

கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்று போராடி வரும் நிலையில் நேற்று முன்தினம் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடந்தது. இந்த நீட் தேர்வு நடைபெறுவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் என்பவர் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதிய மாணவர் தனுஷ் மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட அச்சம் காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நீட் தேர்வுக்கு பின்னர் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூரை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி நேற்று முன்தினம் நீட் தேர்வு எழுதிய நிலையில் இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

தங்களது மகளை டாக்டராக காண போகிறோம் என கனவு கண்ட கனிமொழியின் பெற்றோர் அவரை பிணமாக கண்ட சோகத்தில் அதிர்ச்சியில் கதறி அழுத காட்சி காண்போரை கண்ணீர் வரவழைத்தது. இந்த நிலையில் கனிமொழி தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் அவரது இறுதி சடங்கு இன்று நடைபெற உள்ளது என்றும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு முன்னர் ஒரு மாணவரும், நீட்தேர்வு பின்னர் ஒரு மாணவியும் தற்கொலை செய்து கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை என்பது தீர்வு அல்ல எந்த சோதனையும் எதிர்கொள்ள மாணவ மாணவிகளுக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழக்கப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

More News

விஜய் ஆண்டனியின் 'கோடியில் ஒருவன்': மூன்று நிமிட வீடியோ வைரல்

விஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகிய 'கோடியில் ஒருவன்' என்ற திரைப்படம் வரும் 17ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும்

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியின் 'பகவான்': பிரமாண்டமான பாடல் படப்பிடிப்பு

பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் ஆரி நடித்து வரும் படங்களில் ஒன்று 'பகவான்' என்பதும் இந்த படத்திற்காக பிரமாண்டமான பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

உதயநிதியுடன் இறகுப்பந்து விளையாடிய முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது மகனும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி மற்றும் அமைச்சர் பெருமக்களுடன் இறகு பந்து விளையாடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை இயக்குபவர் இவர் தான்: விரைவில் படப்பிடிப்பு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 'லாபம்' மற்றும் 'துக்ளக் தர்பார்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் கடந்த வாரம் வெளியான நிலையில் இந்த வாரம் 'அனபெல்லா சேதுபதி' என்ற திரைப்படம் வெளியாக உள்ளது

பிசிசிஐ போட்ட புது திட்டம்… 5ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் குழப்பம் தீருமா?

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி யாருக்கு எனத் தீர்மானிக்க முடியாத நிலையில்,