புது கார், புதிய டிரைவருடன் அரசியலுக்கு வருவோம்: ரஜினியின் அர்ஜூனா மூர்த்தி பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
இப்போது இருக்கும் அரசியல் கட்சிகள் பழைய கார்கள் போன்றது என்றும் நாங்கள் புதிய கார் புதிய டிரைவருடன் அரசியலில் வலம் வருவோம் என்றும் அர்ஜுனா மூர்த்தி இன்று பேட்டி அளித்துள்ளார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக கூறிய போது அவருடைய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூனாமூர்த்தி அறிவிக்கப்பட்டார் என்பது தெரிந்ததே. அதன்பின் ரஜினிகாந்த் உடல் நலம் காரணமாக அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்தார்
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக அர்ஜுனா மூர்த்தி கூறிய நிலையில் சற்று முன் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியபோது, ‘இப்போது இருக்கும் கட்சிகள் பழைய ஃபியட், அம்பாசிடர் கார்கள் போன்றவை என்றும் நாங்கள் புது கார், புது டிரைவருடன் தமிழக அரசியலில் வலம் வருவோம் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மேலும் சில வருடங்களுக்கு முன் நோக்கியோ போன் பிரபலமாக இருந்தபோது ஸ்மார்ட்போன் வரும் என்று யாராவது எதிர்பார்த்தது உண்டா? ஸ்டார்ட்போன் வந்து நோக்கியோ போனை ஓரங்கட்டிவிட்டது. அதேபோல் எதிர்பாராத ஒரு மாற்றம் தமிழக மக்களுக்கு நிச்சயம் கிடைக்கும்’ என்று கூறினார்
இந்த நிலையில் அர்ஜூனா மூர்த்தி புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்க வாய்ப்பதாகவும் கூறியுள்ளார். இந்த கட்சிக்கு ரஜினிகாந்த ஆதரவளிக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments