இதெல்லாம் திட்டமிடப்படாமல் நடந்தது: 'டைரி' வெற்றி குறித்து அருள்நிதி அறிக்கை!

  • IndiaGlitz, [Wednesday,August 31 2022]

அருள்நிதி நடித்த ‘டைரி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, இந்த படத்தின் வெற்றியை அடுத்து அருள்நிதிஅனைவருக்கும் நன்றி கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவதுள்

என்‌ சமிபத்திய திரைப்படம்‌ 'டைரி' பெற்றிருக்கும்‌ வரவேற்பு மிகுந்த ம௫ழ்ச்சியைத்‌ தருகிறது. டைரி ஸ்க்ரிப்டின்‌ மீது நம்பிக்கை வைத்ததற்காகவும்‌, அது உயர்ந்த தரத்தில்‌ திரைப்படமாக மாற காரணமாக இருந்ததற்காகவும்‌ தயாரிப்பாளர்‌ கதிரேசன்‌ சார்‌ அவர்களுக்கு என்‌ நன்றியைத்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌. ஓர்‌ இயக்குனராகவும்‌ எழுத்தாளராகவும்‌ சிறப்பாகப்‌ பணியாற்றி ஜெயித்திருக்கும்‌ இயக்குனர்‌ இன்னாசி பாண்டியனுக்கும்‌ என்‌ நன்றிகள்‌. என்‌ நண்பரும்‌ ஒளிப்பதிவாளருமான அரவிந்த்‌ சிங்‌, இசையமைப்பாளர்‌ ரான்‌ ஈத்தன்‌ மோஹன்‌, சக நடிகர்கள்‌, டெக்னிஷியன்கள்‌ மற்றும்‌ இப்படத்தில்‌ பணியாற்றிய அனைவருக்கும்‌ என்‌ மனமார்ந்த நன்றிகள்‌.

உதய்‌ அண்ணனுக்கும்‌ அவரது நிறுவனத்தைச்‌ சேர்ந்தவர்களுக்கும்‌ நான்‌ மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன்‌. அண்ணனின்‌ மதிப்புமிகு நிறுவனமான ரெட்‌ ஜெயண்ட்‌ மூலம்‌ இப்படம்‌ இவ்வளவு சிறப்பாக வெளியானதும்‌, மிக அதிகப்‌ பார்வையாளர்களைச்‌ சென்றடைந்ததும்‌ அவர்களால்தான்‌. ரெட்‌ ஜெயண்ட்‌ நிறுவனத்தினால்‌ வெளியிடப்பட்டு வெற்றி பெற்ற படங்களின்‌ நீண்ட பட்டியலில்‌ டைரியும்‌ இடம்பெற்றிருப்பது பெருமையாக இருக்கிறது.

டி பிளாக்‌, தேஜாவூ. டைரி என என்‌ சமீபத்திய மூன்று படங்களும்‌ கடந்த இரண்டு மாதங்களுக்குள்‌ அடுத்தடுத்து வெளியாகின. இந்த அடுத்தடுத்த ரிலீஸ்கள்‌ திட்டமிடப்படாமல்‌ ஏதேச்சையாக நடந்தவை. கடந்த ஓரிரண்டு ஆண்டுகளில்‌ பெருந்தொற்று ஏற்படுத்திய லாக்‌ டவுன்களின்‌ காரணமாக குறைந்த இடைவெளியில்‌ இப்படங்கள்‌ ர்குரையரங்குகளுக்கு வந்தன. ஆனாலும்‌ மூன்றும்‌ மக்களிடையே பாசிட்டிவ்வான வரவேற்பைப்‌ பெற்றதில்‌ எனக்குக்‌ கூடுதல்‌ மகழ்ச்சி.

எனது தயாரிப்பாளர்கள்‌, விநியோகஸ்தர்கள்‌, திரையரங்க உரிமையாளர்கள்‌, திரையுலகனர்‌, நண்பர்கள்‌, சினிமா ரசிகர்கள்‌, பொதுமக்கள்‌, ஊடக நண்பர்கள்‌, என்‌ குடும்பத்தினர்‌, மற்றும்‌ என்‌ வெற்றியிலும்‌ வளர்ச்சியிலும்‌ முக்கியப்‌ பங்காற்றும்‌ ஓவ்வொருவருக்கும்‌ என்‌ மனமார்ந்த நன்றிகளைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இதே போன்ற சிறந்த படங்களைத்‌ தொடர்ந்து தரும்‌ வகையில்‌ கண்டிப்பாக உழைப்பேன்‌ என தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

இவ்வாறு அருள்நிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More News

அறுந்த சங்கிலி, மாஸ் புகைப்படம்: என்ன சொல்ல வருகிறார் உதயநிதி?

 உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வரிசையாக பல மாஸ் நடிகர்களின் திரைப்படங்களை ரிலீஸ் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கமலஹாசன், ரஜினிகாந்த், சூர்யா, விக்ரம், சிம்பு,

யுவன் பிறக்கும்போது இளையராஜா கம்போஸ் செய்த பாடல் எது தெரியுமா? அவரே கூறிய வீடியோ!

இசையமைப்பாளர்  யுவன் சங்கர் ராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் பிறக்கும் போது தான் எந்த படத்திற்கு எந்த பாடலை கம்போஸ் செய்தேன் என்ற தகவலை இசைஞானி இளையராஜா

107ஐ முடித்தது ஆட்டம் போட்ட ராஷ்மிகா மந்தனா: வைரல் வீடியோ

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா ஜிம்மில் 107 கிலோ எடையை தூக்கி சாதனை செய்த பின் ஆட்டம் போட்ட வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகியுள்ளது. 

'எல்லாம் முடிந்தது வீட்டிற்கு திரும்பி விட்டேன்': பிரியா பவானி சங்கர்

கடந்த சில நாட்களாக சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்த நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது வீட்டிற்கு திரும்பி விட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

மீண்டும் தமிழில் நடிக்க வரும் எமிஜாக்சன்: யாருக்கு ஜோடியாக தெரியுமா?

இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவான 'மதராச பட்டினம்' என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான லண்டனை சேர்ந்த எமி ஜாக்சன் அதன் பிறகு பல தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்தார்.