close
Choose your channels

மீண்டும் தமிழில் நடிக்க வரும் எமிஜாக்சன்: யாருக்கு ஜோடியாக தெரியுமா?

Wednesday, August 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவான ’மதராச பட்டினம்’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான லண்டனை சேர்ந்த எமி ஜாக்சன் அதன் பிறகு பல தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்தார். இந்த நிலையில் மீண்டும் லண்டனுக்கு அவர் திரும்பிய நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் அவர் ரீ என்ட்ரி ஆக உள்ளதாக கூறப்படுகிறது.

‘மதராசப்பட்டினம்’ என்ற திரைப்படத்தில் ஆங்கிலேய பெண் வேடத்தில் அறிமுகமான எமிஜாக்சன் அந்தப் படத்தை அடுத்து பாலிவுட்டில் பிசியானார். அதன் பிறகு தனுஷின் ’தங்கமகன்’ விக்ரமின் ’தாண்டவம்’ விஜய்யின் ’தெறி’ உள்ளிட்ட படங்களில் நடித்த எமிஜாக்சன், கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’2.0’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

இந்த நிலையில் மீண்டும் லண்டன் திரும்பிய எமிஜாக்சன் அங்கு தனது காதலருடன் திருமணம் செய்யாமலே குழந்தை பெற்று அதன் பின் திருமணம் செய்து கொண்டார். இப்போது தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் புதிய காதலருடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நாயகியாக எமி ஜாக்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.