அருண்விஜய்யின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,November 03 2019]

தல அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்த பின் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து, தொடர்ந்து வெற்றிப்படங்களை தந்து கொண்டிருப்பவர் நடிகர் அருண்விஜய். தற்போது அவர் நடித்து கொண்டிருக்கும் படங்களில் ஒன்றை இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கவிருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ‘சினம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அருண்விஜய்யின் 30வது படமான இந்த படத்திற்கு ஷபீர் இசையமைக்கின்றார். கோபிநாத் ஒளிப்பதிவில் மதன்கார்க்கி பாடல் வரிகளில் ஸ்டண்ட் சில்வா ஆக்சனில் உருவாகிறது. இந்த படத்தை மூவி ஸ்லைட் பிரைவைட் லிமிடெட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மேலும் அருண்விஜய் தற்போது ‘அக்னி சிறகுகள், பாக்ஸர், மாஃபியா ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஷாருக்கானை சந்தித்த அட்லி! புதிய அறிவிப்பு எப்போது?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பிரதமர் மோடி வீட்டில் நடந்த பாரபட்சம்: பாடகர் எஸ்பிபி அதிருப்தி

பிரதமர் மோடியின் வீட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது செல்போன் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதற்கு பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் மூன்று அறிவிப்புகளை வெளியிட்ட பிரபல இயக்குனர்!

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிய படங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிவரவில்லை.

எந்த நிலையிலும்‌ சமரசம்‌ செய்ய இயலாது: ஜெயலலிதா படம் குறித்து பிரியதர்ஷினி

முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குனர் பிரியதர்ஷன் 'தி அயர்ன் லேடி' என்ற பெயரிலும், இயக்குனர் கவுதம்மேனன் 'தலைவி'

போலீசுக்கு பயந்து ஊர் ஊராக சுற்றி கொண்டிருக்கின்றேன்: தமிழ்ப்பட ஹீரோ

நம்ம கத' என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் கவித்ரன், தான் போலீசுக்கு பயந்து ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருப்பதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.