close
Choose your channels

ஒரே நாளில் மூன்று அறிவிப்புகளை வெளியிட்ட பிரபல இயக்குனர்!

Sunday, November 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிய படங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிவரவில்லை. குறிப்பாக கடந்த 2012ஆம் ஆண்டுக்கு பின் அவர் இயக்கிய ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘என்னை அறிந்தால்’ மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய மூன்று படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது

இந்த நிலையில் அவர் இயக்கிய மூன்று படங்கள் குறித்த அறிவிப்பை ஒரே நாளில் வெளியிட்டுள்ளார். முதல் அறிவிப்பாக தனுஷ், மேகா ஆகாஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உறவினர் வருண் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் டைட்டில் ‘இமை போல் காக்க’ என அறிவித்து இந்த படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்தில் வெளியாகும் என்றும் இந்த படம் ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ படம் இல்லை என்றாலும் அந்த படத்திற்கு இணையான ஒரு படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘துருவ நட்சத்திரம்’ என்ற திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கி விட்டதாகவும், 60 நாட்களில் இந்த பணி முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவித்துள்ளார். எனவே கவுதம் மேனனின் மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாக வாய்ப்பு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.