close
Choose your channels

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன்கான் ஜாமீனில் விடுவிப்பு!

Saturday, October 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

போதைக்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதையடுத்து இன்று முற்பகல் 11 மணிக்கு அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார்.

கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா நோக்கிச் சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நடந்ததாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குற்றம்சாட்டினர். இந்த வழக்கில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுடன் 8பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். மேலும் வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்றது.

இதையடுத்து ஆர்யன்கான் சார்பாக 2 முறை ஜாமீன் மனு அளித்தபோது அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மும்பை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளித்துள்ளது. இதையடுத்து 4 வாரங்கள் கழித்து ஆர்யன்கான் தற்போது சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos