ஊரடங்கு அறிவிக்கப்பட்டும் 'வலிமை' தயாரிப்பாளரின் துணிச்சலான முடிவு!

  • IndiaGlitz, [Wednesday,January 05 2022]

தமிழகத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் இதனால் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மூன்று காட்சிகள் மட்டுமே திரையரங்குகளில் திரையிடப்படும் என்றும் ஞாயிறு அன்று முழுமையாக திரையரங்குகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ‘வலிமை’ உள்பட பெரிய பட்ஜெட் படங்களில் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது வரை ‘வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ‘வலிமை’ படத்தை ரிலீஸ் செய்ய அனைத்து திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தயாராக இருப்பதாகவும் அதே போல் வெளிநாடுகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திரையரங்கு உரிமையாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாகவும் தயாரிப்பாளர் போனி கபூருக்கு தகவல் வந்ததையடுத்து தமிழக அரசின் ஊரடங்கு கட்டுப்பாட்டினை ஏற்றுக்கொண்டு இந்த படத்தை ரிலீஸ் செய்ய துணிச்சலான முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்போதுவரை ‘வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் எந்தவித மாற்றமும் இல்லை என்ற தகவல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்குவது வெங்கட்பிரபுவா?

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவது வெங்கட்பிரபு என்ற  தகவல் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பா ரஞ்சித் - கார்த்தி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த திரைப்படம் இம்மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அணியில் இருந்து நீக்க வேண்டுமா? தக்கப்பதிலடி கொடுத்த ரஹானே, புஜாரா!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான சடீஸ்வர் புஜாரா,

நடிகை மீனாவின் குடும்பத்திற்குள்ளும் நுழைந்த கொரோனா வைரஸ்: யார் யாருக்கு பாதிப்பு?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு

நடிகர் அருண்விஜய்க்கு கொரோனா பாதிப்பு: தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்!

தமிழ் திரை உலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான அருண் விஜய்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்து உள்ளார்.