நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் அசோக்செல்வன் அடுத்த படம்.. தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,March 27 2024]

கடந்த சில ஆண்டுகளாக நேரடியாக ஓடிடியில் படங்கள் ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில் அசோக் செல்வன் அடுத்த படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டு அது குறித்த ட்ரெய்லர் வீடியோவும் வெளியாகியுள்ளது.

அசோக்செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, வசந்த் ரவி, தீபா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ’பொன் ஒன்று கண்டேன்’. இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி மற்றும் ஜியோ சினிமா ஆகிய இரண்டு தளங்களில் நேரடியாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில், பிரியா இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்வது குறித்த தகவலை தங்களிடம் கூறவில்லை என்று ஏற்கனவே நடிகர் வசந்த் ரவி தனது சமூக வலைதளத்தில் வருத்தம் தெரிவித்து இருந்தார் என்பதும் அவருக்கு பலர் ஆறுதல் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பொன்வொன்று கண்டேன்’ என்ற இந்த திரைப்படம் ஏப்ரல் 14 அன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 2 மணிக்கு வெளியாகும் என்றும் அதேபோல் ஜியோ சினிமா ஓடிடியில் இலவசமாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

இன்று காலை நடிகர் சித்தார்த்துக்கு திருமணமா? மணமகள் யார்?

இன்று காலை நடிகர் சித்தார்த் பிரபல நடிகையை திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டையே உலுக்கிய கோத்ரா ரயில் எரிப்பு சம்பவ திரைப்படம்.. 'அரண்மனை 4' நடிகை தான் ஹீரோயின்..!

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது கோத்ரா ரயில் இருக்கு சம்பவம் நடந்தது என்பதும் இந்த சம்பவம் குறித்து ஒரு சில திரைப்படங்கள் வெளியாகிய நிலையில் தற்போது

கூகுள் பே மூலம் பிச்சை கேட்கிறார்கள்.. பிக்பாஸ் நடிகையின் அதிர்ச்சி தகவல்..!

கூகுள் பே மூலம் பிச்சை கேட்கிறார்கள் என பிக் பாஸ் ஹிந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல பாலிவுட்  நடிகை ஹினாகான் கூறி இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர்

'அரண்மனை 4' ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் குஷ்புவின் அறிவிப்பு..!

சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'அரண்மனை' திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அதன் பின்னர் 'அரண்மனை 2' 'அரண்மனை 3'

மீண்டும் தமிழில் களமிறங்கும் சமந்தா.. ஒரே ஒரு சின்ன நிபந்தனை தான்..!

நடிகை சமந்தா மயோசிட்டி என்ற நோயில் இருந்து குணமாகி மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ள நிலையில் தற்போது அவர் 'சிட்டாடல்' என்ற வெப்தொடரில் நடித்து வருகிறார் என்பதை