close
Choose your channels

நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் அசோக்செல்வன் அடுத்த படம்.. தேதி அறிவிப்பு..!

Wednesday, March 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில ஆண்டுகளாக நேரடியாக ஓடிடியில் படங்கள் ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில் அசோக் செல்வன் அடுத்த படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டு அது குறித்த ட்ரெய்லர் வீடியோவும் வெளியாகியுள்ளது.

அசோக்செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, வசந்த் ரவி, தீபா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ’பொன் ஒன்று கண்டேன்’. இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி மற்றும் ஜியோ சினிமா ஆகிய இரண்டு தளங்களில் நேரடியாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில், பிரியா இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்வது குறித்த தகவலை தங்களிடம் கூறவில்லை என்று ஏற்கனவே நடிகர் வசந்த் ரவி தனது சமூக வலைதளத்தில் வருத்தம் தெரிவித்து இருந்தார் என்பதும் அவருக்கு பலர் ஆறுதல் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பொன்வொன்று கண்டேன்’ என்ற இந்த திரைப்படம் ஏப்ரல் 14 அன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 2 மணிக்கு வெளியாகும் என்றும் அதேபோல் ஜியோ சினிமா ஓடிடியில் இலவசமாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.