2ஆம் பாகமாகிறதா அசோக் செல்வனின் சூப்பர்ஹிட் படம்.. அவரே கொடுத்த அப்டேட்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை நடிகர் அசோக் செல்வன் தொடர்ச்சியாக மூன்று ஹிட் படங்கள் கொடுத்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன் அவர் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று அப்டேட் கொடுத்துள்ளார்.
அசோக் செல்வன் நடித்த ’போர் தொழில்’ ’சபாநாயகன்’ ’ப்ளூ ஸ்டார் ’ ஆகிய மூன்று படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகியுள்ள நிலையில் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த நடிகர் என்ற பெருமையை அசோக் செல்வன் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் அசோக் செல்வன் நடித்த மூன்றாவது படமான ’தெகிடி’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை அடுத்து அவர் இது குறித்து ஒரு பதிவை செய்துள்ளார். ’தெகிடி’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை, நேற்று தான் அந்த படம் ரிலீஸ் ஆனது போல் இருக்கிறது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை மிக விரைவில் எதிர்பார்க்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளதை அடுத்து ’தெகிடி 2’ படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரமேஷ் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையில் அசோக் செல்வன், ஜனனி, ஜெயபிரகாஷ் நடிப்பில் உருவான ’தெகிடி’ திரைப்படம் வெறும் 3 கோடி செலவில் உருவாக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு முன்பே 10 கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பல வெற்றி திரைப்படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகி கொண்டிருக்கும் நிலையில் ’தெகிடி 2’ திரைப்படம் குறித்த அறிவிப்பும் வெளிவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://1571723588.rsc.cdn77.org/anomusercomment.jpg)