close
Choose your channels

ஒரு பீடிக்காக தந்தையையே கொன்ற கொடூர மகன்… அதிர்ச்சி சம்பவம்!

Thursday, February 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அசாம் மாநிலத்தில் கூடுதலாக ஒரு பீடியை தரமறுத்த தந்தையை, பெற்ற மகனே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அசாம் மாநிலத்தின் பார்பேட்டா மாவட்டம் அலிப்பூர் கிராமத்தில் வசித்துவந்தவர் லால்மியா. 50 வயதான இவருக்கு சம்சுல் ஹோக் என்ற 30 வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தந்தையும் மகனும் வீட்டில் இருந்தபோது பீடி குடித்துள்ளனர். அப்போது இன்னொரு பீடியை கொடுக்குமாறு சம்சுல் தனது தந்தையிடம் கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மகனை திட்டியிருக்கிறார்.

தந்தை திட்டியதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மகன் சம்சுல் ஒரு கட்டத்தில் கோபமடைந்து அருகில் இருந்து பொருளை எடுத்து தனது தந்தையின் தலையில் தாக்கியுள்ளார். இதனால் லால்மியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பீடிக்காக தந்தையையே மகன் கொலை செய்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.