close
Choose your channels

2 தவணை  கொரோனா ஊசி போட்ட, காவல் உதவி ஆணையர் உயிரிழப்பு...!

Friday, May 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையளித்து வந்த நிலையில், பல்லாவரம் காவல் ஆய்வாளர் இன்று சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.

பல்லாவரம் காவல் உதவி ஆய்வாளர், ஈஸ்வரன் என்பவர் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பணியில் ஈடுபட்டு இருந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நிலைக் குறைபாடு ஏற்பட, அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை, கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார். இவர் இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது.

இதுவரை சென்னையில் 11 காவல் ஆய்வாளர்கள் இறந்துள்ள சம்பவம், காவல் துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.