close
Choose your channels

சிம்புவுக்கு கூறிய கதையில் தான் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறாரா? அஸ்வத் மாரிமுத்து விளக்கம்..!

Friday, April 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், சிம்பு நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த 2022 ஆம் ஆண்டு செய்திகள் வெளியான நிலையில் தற்போது அந்த கதையில் தான் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு அஸ்வத் மாரிமுத்து விளக்கம் அளித்துள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படம் குறித்த ப்ரோமோ வீடியோவும் வெளியான நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது என்பதை பார்த்தோம்.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் 26வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் நடிக்க மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிம்புவுக்கு தான் தெரிவித்த கதை வேறு என்றும் பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருக்கும் கதை முற்றிலும் வேறு என்றும் இரண்டும் ஒன்றல்ல என்றும் அஸ்வத் மாரிமுத்து விளக்கம் அளித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன் நானும் பிரதீப்பும் ஒன்றாக வேலை செய்தோம் என்றும் தற்போது மீண்டும் இருவரும் இணைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் டைட்டில் மே 1ஆம் தேதி வெளியாகும் என்றும் மே மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் கூறினார். இந்த படம் முழுக்க முழுக்க சென்னையை மையமாக கொண்டு தான் படமாக்கப்படும் என்றும் கண்டிப்பாக இந்த படம் இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.