close
Choose your channels

சொந்த மண்ணில் சதம் மற்றும் 5 விக்கெட்டுக்கள்: அஸ்வினுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

Monday, February 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 13ஆம் தேதி 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கியது என்பது தெரிந்ததே. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து அணியை 134 ரன்களுக்குள் சுருட்டியது. இதில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை தற்போது விளையாடி வரும் நிலையில் சற்று முன் வரை 9 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்துள்ளது. இந்த இன்னிங்சில் கேப்டன் விராட்கோலி தவிர முன்னணி வீரர்கள் அனைவரும் பேட்டிங்கில் சொதப்பிய நிலையில் பந்து வீச்சாளரான அஸ்வின் அபாரமாக விளையாடி சதம் அடித்து அசத்தியுள்ளார். அவர் 141 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து உள்ளார் என்பதும் இதில் 14 பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இரண்டு சதங்கள் அடித்துள்ள அஸ்வினுக்கு இது மூன்றாவது சதம் என்பதும், அதுமட்டுமன்றி ஒரே போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பதும் பெருமைக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது. சொந்த மண்ணில் சதம் அடித்த அஸ்வினுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.