மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் பணிபுரியும் 'அவதார்' குழுவினர்!

  • IndiaGlitz, [Monday,June 14 2021]

மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் ‘அவதார்’ குழுவினர் பணிபுரிய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

மகேஷ்பாபு ராமராகவும் தீபிகா படுகோன் சீதையாகவும் ஹிருத்திக் ரோஷன் ராவணனாகவும் நடிக்க இருக்கும் திரைப்படம் ’ராமாயண்’. இந்திய இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம் கதையை தமிழ் தெலுங்கு இந்தி உள்பட இந்தியாவின் பல மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தின் பட்ஜெட் ரூ 500 கோடி என்று கூறப்படுகிறது

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் மிக அதிகமாக கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கும் என்பதும் 3டியில் தயாராகும் இந்த படம் இந்திய திரையுலகில் ஒரு சாதனை செய்யக்கூடிய படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் கிராஃபிக்ஸ், அனிமேஷன் காட்சிகளை உருவாக்க ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய ‘அவதார்’ படத்தில் பணிபுரிந்த டெக்னாலஜி குழுவினர் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் இந்திய திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நவீன டெக்னாலஜி உடன் உருவாகும் இந்த படம் ’அவதார்’ போல் உலகம் முழுவதும் வசூலை குவிக்குமா? என்பதி பொறுத்திருந்து பார்ப்போம்

More News

பெண் பிள்ளைகளை வளர்ப்பதை விட இதுதான் கஷ்டம்: 'குக் வித் கோமாளி' கனி வெளியிட்ட வீடியோ!

சமீபத்தில் முடிவடைந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் கனி என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இன்னும் மூன்று மாதங்களில் குக் வித் கோமாளி சீசன் 3

நீச்சல் உடையில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த 'சின்னத்தம்பி' சீரியல் நடிகை!

பெரியதிரை நடிகைகள் போல் சர்வசாதாரணமாக சின்னத்திரை நடிகைகள் பிகினியில் தோன்றுவதில்லை என்பதும், வெகு அரிதாகவே சின்னத்திரை நடிகைகள் சமூக வலைதளங்களில் தங்களுடைய பிகினி புகைப்படங்களை

கிளப் ஹவுஸ்-ல் கெத்தாக பேசிய கிஷோர் கே சுவாமி.....!கொத்தாக தூக்கிய போலீஸ்.....!

அரசியல் தலைவர்கள் குறித்து சமூகவலைத்தளங்களில் அவதூறாக பேசிய கிஷோர் கே சுவாமியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

என்னை கடித்துவிட்டது… கையில் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த இளைஞரால் பரபரப்பு!

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இளைஞர் ஒருவர் கையில் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள்: திமுக பிரமுகர்கள் மீது தமிழ் நடிகை பகீர் குற்றச்சாட்டு!

ஒரு பக்கம் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து மக்களின் மத்தியில் பாராட்டுகளை குவித்து வரும் நிலையில் ஒரு சிலர் ஆட்சிக்கு களங்கம் விளைவிக்கும்