close
Choose your channels

'அயலான்' இயக்குனருக்கு கிடைத்த விலைமதிப்பில்லா பரிசு.. குவியும் வாழ்த்துக்கள்..!

Friday, March 1, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகில் இரண்டே படங்கள் இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இயக்குனர் ரவிக்குமாருக்கு விலைமதிப்பில்லா பரிசு கிடைத்ததை அடுத்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

கடந்த 2015 ஆம் ஆண்டு ’இன்று நேற்று நாளை’ என்ற திரைப்படத்தை ரவிக்குமார் இயக்கி இருந்தார் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்தது.

அதன் பின்னர் அவரது இயக்கத்தில் உருவான ’அயலான்’ திரைப்படம் 9 ஆண்டுகள் கழித்து கடந்த மாதம் வெளியானது என்பதும் இந்த படமும் சுமாரான வெற்றியை பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் ரவிக்குமாருக்கு தற்போது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதாகவும் இதனை அடுத்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இயக்குனர் ரவிக்குமார் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரியா கணேசன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் மீண்டும் பிரியா கணேசன் கர்ப்பமான நிலையில் தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது சமூக வலைதளத்தில் ரவிகுமார் மகிழ்ச்சியுடன் அறிவித்து, உங்கள் அன்பு வாழ்த்துக்களால் வளம் பெறுவான்’ என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment