close
Choose your channels

'அயோத்தி' இயக்குனரின் அடுத்த பட அறிவிப்பு.. தயாரிப்பாளர் இவர்தான்..சசிகுமார் தான் மீண்டும் ஹீரோவா?

Tuesday, April 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு வெளியான ’அயோத்தி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கும் அடுத்த பட அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் சசிகுமார் நடித்த ’அயோத்தி’ திரைப்படம் வெளியானது என்பதும் இந்த படம் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் மிகவும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்ததாக இயக்குனர் மந்திர மூர்த்திக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பது தெரிந்தது. மேலும் இந்த படம் வசூலிலும் திருப்திகரமாக இருந்ததை அடுத்து ஓடிடியில் வெளியான போது அதிலும் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’அயோத்தி’ என்ற வெற்றி படத்தை கொடுத்த நிலையில் ஒரு ஆண்டாக இயக்குனர் மந்திர மூர்த்திக்கு வேறு எந்த படங்களும் அமையாத நிலையில் தற்போது அவர் இயக்க இருக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை மதுரை அன்புவின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இது குறித்த போஸ்டர் ஒன்றும் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்க இருப்பதாகவும் விரைவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ’அயோத்தி’ திரைப்படத்தின் வெற்றிக்கு சசிகுமாரின் நடிப்பு ஒரு மிகப்பெரிய காரணம் என்ற வகையில் மந்திரமூர்த்தி அடுத்த படத்திலும் சசிகுமார் நடிப்பாரா? அல்லது வேறு நட்சத்திரங்கள் நடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.