'பாகுபலி 2' படம் தான் கடைசி. விநியோகிஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Sunday,April 16 2017]

கடந்த சில ஆண்டுகளாக பெரிய நடிகர்களின் படத்தின் ஒட்டுமொத்த தமிழக உரிமையை பெற்று ரிலீஸ் செய்யும் நிறுவனங்கள் அதிக அளவில் நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இனிமேல் பெரிய நடிகர்கள் அல்லது பெரிய பட்ஜெட் படங்களின் உரிமையை ஒட்டுமொத்தமாக வாங்காமல் பிரித்து பிரித்துதான் வாங்கப்படும் என்று விநியோகிஸ்தர்கள் சங்கம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

இதன் காரணமாக இனிமேல் பெரிய பட்ஜெட் படங்களின் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை என ஏரியாவாரியாக பிரித்து தான் வாங்க வேண்டும் என்றும் யாரும் தமிழகத்தின் ஒட்டுமொத்த உரிமையை வாங்கக்கூடாது என்றும் ஒட்டுமொத்த விநியோகிஸ்தர்கள் முடிவு செய்துள்ளனர். வரும் 28ஆம் தேதி வெளியாகும் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' படமே ஒட்டுமொத்தமாக உரிமை பெற்ற கடைசி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இந்த அதிரடி முடிவால் பெரிய நடிகர்களின் படங்களின் விற்பனைக்கு பாதிப்பு வரும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இதுவரை ஒட்டுமொத்த உரிமையை ஒருவரிடமே கொடுத்து மிகப்பெரிய தொகையை ஒரே நபரிடம் இருந்து தயாரிப்பாளர் பெற்று வந்தார். ஆனால் இனிமேல் ஒவ்வொரு ஏரியா விநியோகிஸ்தர்களிடம் பேரம் பேசி விற்பனை செய்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை பார்க்க வேண்டிய நிலை வரும். அதேபோல் பெரிய நடிகர்களின் படங்கள் நஷ்டம் ஆனால் மொத்த உரிமை பெற்ற ஒரே ஒரு விநியோகிஸ்தர்களுக்கு மட்டுமே இதுவரை நடிகர்களும், தயாரிப்பாளர்களும் பதில் சொல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இனிமேல் நஷ்டம் ஏற்பட்டால் ஒவ்வொரு ஏரியா விநியோகிஸ்தர்களுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆயினும் இந்த அதிரடி முடிவால் சிறிய பட்ஜெட் படங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பது சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த நிம்மதியான செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தெலுங்கு 'பவர்பாண்டி'யில் ரஜினியின் நெருங்கிய நண்பர்

கடந்த வெள்ளியன்று வெளியான தனுஷ் இயக்கிய முதல் படமான 'பவர்பாண்டி' திரைப்படம் ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் உள்பட அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. தேசிய விருது பெற்ற நடிகர், பாடகர், பாடலாசிரியர், தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் ஆகிய பெருமைகளை அடுத்து இயக்குனர் தேர்விலும் த

நாயகியே இல்லாத விஜய்சேதுபதியின் 25வது படம்

பிரபல நடிகர் விஜய்சேதுபதி நடிக்கவுள்ள 25வது படத்தின் டைட்டில் 'சீதக்காதி' என்றும் இந்த படத்தை 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்...

எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்கள். சூர்யா ரசிகர்களிடம் விக்னேஷ்சிவன் வேண்டுகோள்

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது சூர்யா நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் நேற்று தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று பர்ஸ்ட்லுக் வெளியாகாததால் சூர்யா &#

நயன்தாராதான் என் முதல் நாயகி. சரவணா ஸ்டோர் உரிமையாளர் பேட்டி

பிரபல தொழிலதிபரும் சரவணா ஸ்டோர் உரிமையாளருமான சரவணன் சமீபகாலமாக சரவனா ஸ்டோர் விளம்பரத்தில் நடித்து வருகிறார்.

'மாயா' இயக்குனரின் அடுத்த பட டைட்டில் மற்றும் ஹீரோ அறிவிப்பு

இந்த நிலையில் இயக்குனர் அஸ்வின் சரவணன் தனது அடுத்த படத்திற்கு தற்போது தயாராகிவிட்டார்.