close
Choose your channels

'மாயா' இயக்குனரின் அடுத்த பட டைட்டில் மற்றும் ஹீரோ அறிவிப்பு

Saturday, April 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நயன்தாரா நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த திகில் திரைப்படம் 'மாயா'. தமிழகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தின் வெற்றிக்கு நயன்தாரா முக்கிய காரணமாக இருந்தாலும் திரைக்கதை மற்றும் இயக்கம் இன்னொரு காரணமாக அமைந்தது. இந்த படத்தை இயக்கிய அஸ்வின் சரவணனனுக்கு குவிந்த வாழ்த்துக்களே இதற்கு சான்று
இந்த நிலையில் இயக்குனர் அஸ்வின் சரவணன் தனது அடுத்த படத்திற்கு தற்போது தயாராகிவிட்டார். இவர் இயக்கும் அடுத்த படத்திற்கு 'இறவாக்காலம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா நாயர் நடிக்கவிருக்கும் இந்த புதிய படம் காதல் மற்றும் த்ரில்லர் கதையம்சம் கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. மேலும் இந்த படத்திற்கு 'மாயா' படத்துக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யோஹன் அவர்களே இசையமைப்பாளராக பணிபுரிய உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.