மரணம் அடைந்து அரை மணி நேரம் கழித்து திடீரென உயிர்த்தெழுந்த பிறந்த குழந்தை!

  • IndiaGlitz, [Monday,September 09 2019]

பிரிட்டனில் பிறந்த குழந்தை ஒன்று இறந்து அரை மணி நேரத்துக்கு பின்னர் திடீரென உயிர் பெற்று எழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பிரிட்டனை சேர்ந்த 25 வயது அலெக்ஸ் கெல்லி என்ற நிறைமாத கர்ப்பிணி டெலிவரிக்கு முன்னர் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற போது அவரது வயிற்றில் உள்ள குழந்தையின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றி இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அதனால் குழந்தையை உடனே அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்காவிட்டால் தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்து என்பதை புரிந்து கொண்டு உடனே அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

ஆனால் அறுவை சிகிச்சையின் மூலம் பிறந்த குழந்தை பேச்சு, மூச்சின்றி இருந்தது. அழுகையும் இல்லை என்பதால் குழந்தை இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். ஆனால் குழந்தை பிறந்து சரியாக 28 நிமிடங்கள் கழித்து திடீரென குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. இதனால் ஆச்சரியம் அடைந்த மருத்துவர்கள் உடனடியாக ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். குழந்தையின் பாதுகாப்பிற்கு இன்குபேட்டரிலும் வைக்கப்பட்டது. தற்போது அந்த குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிறந்த குழந்தை 28 நிமிடங்கள் பேச்சு, மூச்சு மற்றும் அழுகை எதுவும் இன்றி பின்னர் திடீரென உயிர் பெற்றது மருத்துவ உலகில் பெரும் அதிசயமாக பார்க்கப்படுகிறது.

More News

காமிராவுக்கு முன்னாடி நான், பின்னாடி கவின் - லாஸ்லியா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தபின்னரும் அவ்வப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் தனது கருத்துக்களை டுவிட்டரிலும் பேட்டியிலும்

சாக்சி, வனிதா, ஷெரினுக்கு மதுமிதா வைத்த கேள்விகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா கலந்து கொண்டிருந்தபோது அவர் கூறிய 'தமிழ்ப்பொண்ணு' என்ற வார்த்தை தான் பலரை கடுப்பாக்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த வெளிமாநில போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி

பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தினராக செல்லும் இன்னொரு பிரபலம்!

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே சாக்சி, மோகன் வைத்யா, அபிராமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக்ச் என்று குட்டையை கிளபிய நிலையில் தற்போது

என்னை 8 பேர் சேர்ந்து 'கேங் ராக்கிங்' செய்தார்கள்: மதுமிதா பேட்டி

பிக்பாஸ் விதிமுறைகளை மீறியதால் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா, இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

ரொம்ப ஆட்றாங்க, என்னால சும்மா இருக்க முடியாது: வனிதா ஆவேசம்

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேசன் படலம் நடக்கும் என்பது தெரிந்ததே. கடந்த மூன்று வாரங்களாக நாமினேஷனில் இருந்து தப்பி வந்த வனிதாவை, இந்த வாரம் 'வி ஆர் பாய்ஸ்' வச்சு செய்வார்கள் என்று எதிர்பார்த்ததே