close
Choose your channels

சாக்சி, வனிதா, ஷெரினுக்கு மதுமிதா வைத்த கேள்விகள்

Monday, September 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா கலந்து கொண்டிருந்தபோது அவர் கூறிய 'தமிழ்ப்பொண்ணு' என்ற வார்த்தை தான் பலரை கடுப்பாக்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த வெளிமாநில போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி தமிழகத்தில் இருந்து கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் இந்த வார்த்தையால் கடுப்பானது ஏன் என்பதே பலரது கேள்வியாக இருந்தது.

இந்த நிலையில் இன்றைய பேட்டியில் மதுமிதா சாக்சி, அபிராமி, வனிதா ஆகியோர்களுக்கு ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். சாக்சி தன்னிடம் 'நீ தமிழ்ப்பொண்ணு சொல்றியே, நீ பிராக் போட்டிருகியே' என்று என்னை பார்த்து கேட்டார். அதற்கு நான் அவரிடம் ஒரு கேள்வி கேட்கின்றேன், நானாவது பிராக் போட்டிருக்கின்றேன், நீ போட்டிருக்க கேவலமான டிரெஸ்ஸை பத்தி நீ நினைச்சு பார்த்ததுண்டா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

அதேபோல் அதேபோல் 'பாட்டில் பேபி' என்பது ஒரு விளையாட்டுக்கு உருவானது, இதை ஏன் குறை சொல்கிறாய்? என வனிதா என்னிடம் ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு நான் அவரிடம் ஒரு கேள்வியை கேட்கின்றேன். உங்களுக்கு ரெண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றது அல்லவா? அந்த குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்தபின் பாட்டில்பேபியை காட்டி 'அம்மா இது என் கிளாஸ் ரூமில் இருக்கும் ஒருத்தனுக்கு பொறந்துச்சு என்று சொன்னால் அவங்களுக்கு கோபம் வருமா? வராதா? என்ற கேள்வியை எழுப்பினார்.

அதேபோல் ஷெரினிடம் நான் கேட்கும் என்னவெனில், 'அபிராமியுடன் அதிக நேரம் இருப்பவர் நீ தான். உன்னுடைய நெருங்கிய தோழி அவர். அவர் இவ்வாறு ஒரு பாட்டில் பேபி என்று சொல்லும்போது அதுதவறு என்று சுட்டிக்காட்ட வேண்டியது ஒரு தோழியின் கடமை. அதை செய்யாமல் அவரை உற்சாகப்படுத்தும் நீ உண்மையில் தோழியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் அளிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.