இன்று முதல் மீண்டும் 'பாகுபலி': மகிழ்மதியை நேரில் பார்க்க வாய்ப்பு

  • IndiaGlitz, [Saturday,September 09 2017]

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி மற்றும் 'பாகுபலி 2' ஆகிய திரைப்படங்கள் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்து உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியது. இந்த படத்தின் வெற்றிக்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் ஒரு முக்கிய காரணம் பிரமாண்டமான அரங்குகள். கோடிக்கணக்கில் செலவு செய்து ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட அரங்குகள் தற்போது சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

ஆம், மகிழ்மதி என்ற நாடு தற்போது 'மகிஸ்மதி' என்ற பெயரில் சுற்றுலாதலமாக்கியதோடு இன்று முதல் பார்வையாளர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை அடுத்து, படம் வெளியான பின்னரும் அரங்குகள் எதுவுமே இடிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அது சுற்றுலாதலமாகியுள்ளது.

தென்னிந்தியாவில் ஒரு படப்பிடிப்பு நடந்த இடத்தை சுற்றுத்தலமாக்குவது இதுவே முதல்முறை என்பதால் இதுவும் ஒரு சாதனையாக கருதப்படுகிறது. பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் மகிழ்மதி நாட்டிற்கே சென்று வருவது போன்ற உணர்வை அளிப்பதாக கூறியுள்ளனர். 

More News

'கதாநாயகன்', 'நெருப்புடா' படங்களின் முதல் நாள் வசூல் எப்படி?

நேற்று வெளியாகியுள்ள விஷ்ணுவிஷாலின் 'கதாநாயகன்' மற்றும் விக்ரம்பிரபுவின் 'நெருப்புடா' ஆகிய இரு படங்களுமே அந்தந்த படங்களின் ஹீரோக்கள் தயாரிப்பில் உருவானது.

நீட் தேர்வு எழுத நான் தயார்! ஸ்டாலின் தயாரா? தமிழிசை சவால் கேள்வி

தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என்றும், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்றும் கடந்த சில நாட்களாக மாணவர்களும், எதிர்க்கட்சிகளும் போராடி வருகின்றனர்.

இது என்னுடைய இந்தியா அல்ல' ஏ.ஆர்.ரஹ்மான்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஒன் ஹார்ட்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது.

750 ஏக்கரில் உள்ள இந்திய ராணுவ தளத்தில் கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை ஒருபக்கம் தனது டுவிட்டரில் மூலம் தெரிவித்து கொண்டிருந்தாலும், 'சபாஷ் நாயுடு' மற்றும் 'விஸ்வரூபம் 2' படங்களின் பணிகளையும் கவனித்து வருகிறார்

சட்டத்தை யாரும் அவமானம் செய்ய வேண்டாம்: கமல் வேண்டுகோள்.

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் அரசியல் கருத்துக்களை ஆக்கபூர்வமாக தெரிவித்து வரும் நிலையில் நீட் பிரச்சனை குறித்தும், அனிதாவின் மரணம் குறித்தும் அவர் கூறிய கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின...