close
Choose your channels

இன்று முதல் மீண்டும் 'பாகுபலி': மகிழ்மதியை நேரில் பார்க்க வாய்ப்பு

Saturday, September 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி மற்றும் 'பாகுபலி 2' ஆகிய திரைப்படங்கள் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்து உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியது. இந்த படத்தின் வெற்றிக்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் ஒரு முக்கிய காரணம் பிரமாண்டமான அரங்குகள். கோடிக்கணக்கில் செலவு செய்து ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட அரங்குகள் தற்போது சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

ஆம், மகிழ்மதி என்ற நாடு தற்போது 'மகிஸ்மதி' என்ற பெயரில் சுற்றுலாதலமாக்கியதோடு இன்று முதல் பார்வையாளர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை அடுத்து, படம் வெளியான பின்னரும் அரங்குகள் எதுவுமே இடிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அது சுற்றுலாதலமாகியுள்ளது.

தென்னிந்தியாவில் ஒரு படப்பிடிப்பு நடந்த இடத்தை சுற்றுத்தலமாக்குவது இதுவே முதல்முறை என்பதால் இதுவும் ஒரு சாதனையாக கருதப்படுகிறது. பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் மகிழ்மதி நாட்டிற்கே சென்று வருவது போன்ற உணர்வை அளிப்பதாக கூறியுள்ளனர். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.