close
Choose your channels

ஆஜித்தின் புதிய முயற்சிக்கு நேரில் வந்து வாழ்த்திய பாலா-ஷிவானி!

Wednesday, February 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆஜித்தின் புதிய முயற்சிக்கு நேரில் வந்து பாலாஜி, ஷிவானி உள்பட பிக்பாஸ் போட்டியாளர்கள் சிலர் வாழ்த்து தெரிவித்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் இருந்த போது மட்டுமின்றி பிக்பாஸ் முடிந்த பின்னரும் இரண்டு குழுவாகவே போட்டியாளர்கள் இருந்துவருவதாக அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் பாலாவின் குரூப்பில் இருந்ததாக கூறப்படும் ஆஜித் தற்போது புதிய சவுண்ட் ரிக்கார்டிங் ஸ்டூடியோ ஒன்றை திறந்துள்ளார். சென்னை சூளைமேட்டில் அவர் தொடங்கியுள்ள ஏகே சவுண்ட் வொர்க் என்ற ஸ்டுடியோவின் திறப்பு விழாவிற்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதில் பாலா, ஷிவானி, கேபி, சம்யுக்தா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஆஜித், தன்னுடைய ரிக்கார்டிங் ஸ்டுடியோ திறப்பு விழாவுக்கு வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்றும், இந்த புகைப்படத்தில் சுரேஷ் தாத்தா மிஸ்ஸிங் என்றாலும், அவரும் நேரில் வந்து வாழ்த்தினார் என்றும் அவருக்கு எனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் பாலாவின் பக்கத்தில் ஷிவானி நிற்பது போன்று இருப்பதை அடுத்து நெட்டிசன்கள் வழக்கம் போல் தங்களது நக்கலான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.