பாலாவின் 'வர்மா' படம் வெளியாகாது! அதிர்ச்சி அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,February 07 2019]

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கிய 'வர்மா' திரைப்படம் வெளியாகாது என அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சீயான் விக்ரம் மகன் துருவ் அறிமுகமாகும் 'வர்மா' படத்தின் படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து வரும் பிப்ரவரி 14, காதலர் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஃபர்ஸ்ட் காப்பி ஒப்பந்த அடிப்படையில் பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் அளித்த இந்த படம் தங்களுக்கு திருப்தி தரவில்லை என்பதால் இந்த படத்தை ரிலீஸ் செய்யபோவதில்லை என ஈ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. அர்ஜுன் ரெட்டி' ஒரிஜினல் படத்தில் இருந்து 'வர்மா' படம் மாறுபட்டிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், விரைவில் இதே படம் வேறு இயக்குனரால் மீண்டும் படப்பிடிப்பு நடத்தி வரும் ஜூன் மாதம் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் இந்நிறுவனம் அறிக்கை ஒன்றின்மூலம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் புதிய நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

More News

சித்தார்த் படத்தில் இணைந்த 2 பிரபல இசையமைப்பாளர்கள்

ஒரு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்கும் படத்தில் இன்னொரு பிரபல இசையமைப்பாளர் ஒரு பாடலை பாடும் டிரெண்ட் கோல்வுட்டில் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது.

'விஜய் 63' படத்துடன் கனெக்சன் ஆகும் விஜய்சேதுபதியின் அடுத்த படம்

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 63' திரைப்படம் ஒரு ஸ்போர்ட்ஸ் திரைப்படம் என்பதும் இந்த படத்தில் பெண்கள் கால்பந்து வீராங்கனைகளுக்கு பயிற்சியாளராக விஜய் நடித்து வருகிறார்

இளையராஜா மகளுக்கு நன்றி கூறிய பிரபல இசையமைப்பாளர்

இசைஞானி இளையராஜா மட்டுமின்றி அவரது குடும்பமே ஒரு இசைக்குடும்பம் என்பது அனைவரும் அறிந்ததே

அடல்ட் காமெடி பட இயக்குனருடன் மீண்டும் இணைந்த கவுதம் கார்த்திக்

கவுதம் கார்த்திக் நடித்த 'ஹர ஹர மகாதேவகி' மற்றும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய இரண்டு அடல்ட் காமெடி படங்களை இயக்கிய சந்தோஷ் ஜெயகுமார்,

அம்பானி மனைவியுடன் ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டு பெண்கள்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டு பெண்கள் சமீபத்தில் தொழிலதிபர் அம்பானியின் மனைவி நீடா அம்பானியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.