விக்ரம் மகன் துருவ் அறிமுகமாகும் படத்தின் இயக்குனர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,October 09 2017]

சீயான் விக்ரம் அவர்களின் திரையுலக வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்திய படம் 'சேது'. இயக்குனர் பாலா இயக்கிய இந்த படத்திற்கு பின்னர்தான் அவருக்கு சியான் என்ற செல்லப்பட்டமும், ரசிகர்களின் அன்பும் கிடைத்தது

இந்த நிலையில் விக்ரமுக்கு திருப்பத்தை கொடுத்த இயக்குனர் பாலா தற்போது அவரது மகன் துருவ் அறிமுகமாகும் படத்தை இயக்கவுள்ளார். ஆம் தெலுங்கு படமான அர்ஜூன்ரெட்டி படத்தில் துருவ் அறிமுகமாகவுள்ளார் என்பதை சில நாட்களுக்கு முன்னர் பார்த்தோம் அல்லவா! அந்த படத்தின் இயக்குனர் பாலா என்று சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலாவின் இயக்கத்தில் நடித்த பின்னர் தான் விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா உள்பட பலர் முன்னணி நடிகர்களாகி உள்ளனர். அந்த வகையில் துருவ் நடிக்கும் முதல் படமே பாலா இயக்கும் படமாக அமைந்தது அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது.

More News

மாயோன்: தளபதியின் மெர்சலுக்கு கிடைத்த திடீர் போனஸ்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.

கார்த்தி-கவுதம் கார்த்திக் படத்தின் சுவாரஸ்யமான டைட்டில் அறிவிப்பு

முதல்முறையாக நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் இணணந்து நடிக்கும் படம் ஒன்றை இயக்குனர் திரு இயக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

பிரதமரிடம் ரஜினி, கமல் பேச வேண்டும். பிரபல இயக்குனர் கோரிக்கை

கோலிவுட் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகமே ஆன்லைன் பைரஸி, திருட்டு டிவிடி ஆகிய பிரச்சனைகளால் தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசு திரைத்துறைக்கு ஜிஎஸ்டி

'சண்டக்கோழி 2' படப்பிடிப்பில் மயில்சாமி செய்த மகத்தான காரியம்

தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. டெங்கு காய்ச்சலால் பலியாகும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது

சென்னை காவல் நிலையத்தில் இந்தியாவின் முதல் திருநங்கை எஸ்.ஐ 

இந்தியாவின் முதல் திருநங்கை எஸ்.ஐ ஆக சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில்  பிரித்திகா யாஷினி இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்