close
Choose your channels

கார்த்தி-கவுதம் கார்த்திக் படத்தின் சுவாரஸ்யமான டைட்டில் அறிவிப்பு

Monday, October 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முதல்முறையாக நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் இணணந்து நடிக்கும் படம் ஒன்றை இயக்குனர் திரு இயக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் நாயகிகளாக நடிக்க ரெஜினா மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிக்கவுள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இந்த டைட்டிலை சற்று முன்னர் நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்திற்கு MR.சந்திரமெளலி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'மெளன ராகம்' படத்தில் கார்த்திக், ரேவதியின் தந்தையாக நடித்த பூர்ணம் விஸ்வநாதனை பார்த்து பேசிய புகழ்பெற்ற வசனம் 'MR.சந்திரமெளலி' என்பது அனைவரும் அறிந்ததே. அதே வசனம் அவர் நடிக்கும் படத்திற்கும் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.