ஷிவானி வீட்டில் நடந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பாலாஜி: நெட்டிசன்கள் கண்டனம்!

பிக்பாஸ் ஷிவானி நாராயணன் வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் பாலாஜி முருகதாஸ் கலந்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாலாஜி முருகதாஸின் பிடியில் ஷிவானி நாராயணன் இருந்ததாக கூறப்பட்டது. மேலும் பாலாஜியுடன் நெருக்கமாக இருந்ததற்காக ஷிவானியின் தாயார், பிக்பாஸ் வீட்டுக்கு சென்றபோது ஷிவானியை கடுமையாக திட்டினார் என்பதும் தெரிந்ததே

இருப்பினும் கடைசி நேரத்தில் டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்க்கில் வெற்றிபெற்று சிங்க பெண்ணாக ஷிவானி 90 நாள் கழித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு அவர் பாலாஜியுடன் அதிக நெருக்கம் காண்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ஷிவானி வீட்டில் நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் பாலாஜி முருகதாஸ், சம்யுக்தா, ஆஜித் ஆகியோர் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஷிவானி வீட்டில் வளர்ந்து வரும் நாய்க்குட்டி ஒன்றின் முதலாவது பிறந்த நாள் நிகழ்ச்சியில் தான் மேற்கண்ட மூவரும் கலந்துகொண்டனர் என்று தெரிகிறது.

இதுகுறித்த புகைப்படம் ஒருபக்கம் வைரலாகி வரும் நிலையில் மற்றொரு பக்கம் நெட்டிசன்கள் கடும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். நாய்க்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் நிகழ்ச்சி தேவையா? என்பதே பெரும்பாலானோர்களின் கமெண்ட்ஸ்களாக உள்ளது.

More News

'கர்ணன்' படத்தை அடுத்து தனுஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படம் ஏப்ரல் 6-ஆம் தேதி ரிலீஸாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தனுஷின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இளம் வீரர்களுக்கு கைக்கொடுத்த சிஎஸ்கே!

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் போட்டியில் சென்னை சிஎஸ்கே அணி தகுதிச் சுற்றுக்கே போகாமல் வெளியேறியது.

உலகில் தனித்து விடப்பட்டவராக உணர்ந்தேன்… விராட் கோலி தெரிவித்த கருத்தால் அதிர்ச்சி!

இங்கிலாந்துடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணி தற்போது அகமதாபாத்தில் முகாமிட்டு உள்ளது.

விவசாயியின் இறந்த உடலை… எலி கடித்து குதறிய கொடூரம்!

மாரடைப்பால் உயிரிழந்து மாச்சுவரியில் வைக்கப்பட்ட விவசாயி ஒருவரின் உடலை எலிகள் கடித்து குதறிய சம்பவம் ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்று இருக்கிறது.

என் படம் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கடும்: ஷகிலா

கடந்த 80களில் ஆபாச படங்களில் நடித்து வந்த ஷகிலா லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்று இருந்தார் என்பதும் முன்னணி நடிகர்கள் படங்கள் கூட ஷகிலாவின் படங்களால் வசூல் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது