'பீஸ்ட்' படத்தின் ரிலீஸ் உரிமையை கைப்பற்றியது இந்த பிரபல நடிகரா?

  • IndiaGlitz, [Tuesday,December 21 2021]

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’பீஸ்ட்’ படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை பிரபல தெலுங்கு நடிகரின் நிறுவனம் ஒன்று பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில், அனிருத் இசையில் உருவான திரைப்படம் ’பீஸ்ட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு மாநில ரிலீஸ் உரிமையை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிறுவனம் பிரபல தெலுங்கு நடிகர் ராணாவின் தந்தையும், பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷின் சகோதரரான சுரேஷ்பாபு என்பவருக்கு சொந்தமானது என்பதும் இந்த நிறுவனத்தில் வெங்கடேஷூம் பங்குதாரர் என்று கூறப்படுகிறது.

’பீஸ்ட்’ படத்தின் தெலுங்கு மாநில உரிமையை சுரேஷ் புரடொக்சன்ஸ் நிறுவனம் பெற்றுள்ள தகவல் உறுதி செய்யப்பட்டால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ’பீஸ்ட்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ மற்றும் ’பிகில்’ ஆகிய திரைப்படங்கள் தெலுங்கு மாநிலங்களில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று வசூலை வாரி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் சூப்பர் அப்டேட்!

சிம்பு நடித்துவரும் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்த படப்பிடிப்பு நடைபெறும் இடம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 

பிக்பாஸ் போட்டியாளர்களை கதறி அழவைத்த அமீர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் இரண்டு புரமோவில் அக்சரா மற்றும் சிபி ஆகியோரின் உறவினர்கள் வருகை தந்தனர் என்பதால் இதனை அடுத்து பிக்பாஸ் வீடு சென்டிமென்ட் மற்றும்

பிரபல நடிகை சுட்டுக்கொலை… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சம்பவம்!

மெக்சிகோ நாட்டில் பிரபல நடிகையாக வலம்வந்த டானியா மெண்டோசா என்பவர்

கோடி ரூபாய் காரை வெடிவைத்து நொறுக்கிய நபர்… அப்படியென்ன கோபம்?

உலகின் மிகப்பிரபலமான மின்சார கார் நிறுவனமான டெஸ்லா

காபி பிளாஸ்கில் 4 கிலோ தங்கம் கடத்திய பெண்கள்… கூட்டமாக சிக்கிய சம்பவம்!

கொன்யாவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சிவாஜி மகாராஜா விமான நிலையத்தில் வந்திறங்கிய 18 கென்ய நாட்டு