close
Choose your channels

'தனி ஒருவன் 2' படத்திற்கு முன்பே மாஸ் நடிகருடன் ஒரு படம்.. மோகன் ராஜா திட்டம்..!

Friday, May 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’தனி ஒருவன்’ திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியானது. ஆனாலும் இந்த படம் அடுத்த கட்டத்தை நோக்கி நகராத நிலையில் இந்த படம் விரைவில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் ரிலீசுக்கு பின்னர் ’தனி ஒருவன் 2’ படத்தின் பணிகளை ஏஜிஎஸ் நிறுவனம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ’தனி ஒருவன் 2’ படத்திற்கு முன்பே மாஸ் நடிகருடன் இணைந்து ஒரு படத்தை இயக்க மோகன் ராஜா திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மோகன் ராஜா இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகர் சிரஞ்சீவி நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் கதையை பிவிஎஸ் ரவி என்பவர் எழுதி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் ஆகஸ்ட் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் ஒன்றாம் தேதி வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இயக்குனர் மோகன் ராஜா, அஜித்துக்கு ஒரு கதை சொல்லி இருப்பதாகவும் ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய படங்களை முடித்துவிட்டு அஜித், மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.