பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் பரணி! வைல்ட் கார்ட் உண்டா?

  • IndiaGlitz, [Wednesday,July 19 2017]

விதிமுறைகளை மீறியதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகர் பரணி, தனது மனைவி, குழந்தைகளை பார்ததவுடன் மகிழ்ச்சியில் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். கடந்த வாரம் கமல்ஹாசனிடம் மிகத்தெளிவாக தனது நிலையை விளக்கி அனைவரின் மனதையும் கவர்ந்த பரணி தற்போது நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தான் வீட்டிற்கு வந்தபோது தனது குடும்பத்தினர் அனைவரும் காய்ச்சலில் இருந்ததாகவும், தன்னை பார்த்ததும் மாத்திரையே போடாமல் எல்லோருக்கும் காய்ச்சல் போய்விட்டதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார். மேலும் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது தனிமையில் தவித்த தனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார்.
தன்னுடைய திருமணம் வீட்டில் பெரியவர்கள் பார்த்து செய்த அரேஞ்ச் திருமணம் என்றும் இருப்பினும் திருமணத்திற்கு பின்னர் தனது மனைவியை அதிகம் நேசிப்பதாகவும் பரணி கூறினார்.
விஜய் டிவியின் மற்ற நிகழ்ச்சி மாதிரி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் வைல்ட் கார்ட் என்பது உண்டா? அப்படி இருந்தால் நீங்கள் அதில் இடம்பெறும் வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு பிக்பாஸ் குறித்து எந்த கேள்விக்கும் நான் பதில் சொல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் தயவு செய்து அதுகுறித்து எதுவும் கேட்க வேண்டாம் என்றும் அவர் கூறினார்
மேலும் 'இவன் தந்திரன்' தயாரிப்பாளரின் படம் ஒன்றிலும், சமுத்திரக்கனியுடன் ஒரு படமும் நடிக்கவிருப்பதாகவும் இதனையடுத்து மேலும் ஒருசில படங்களுக்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறிய பரணி, மக்களுக்கு என்றும் நான் நல்ல நடிகனாக இருப்பேன்' என்றும் பரணி கூறியுள்ளார்.

More News

கமல்-ரஜினி சந்திப்பால் அரசியல் திருப்புமுனை ஏற்படுமா?

திரைப்படத்தில் கூட இணைந்து இனி நடிப்பதில்லை என்று முடிவெடுத்த கமல், ரஜினி அரசியலில் ஒன்று சேரும் காலம் கனிந்துவிட்டதாக கூறப்படுகிறது...

உன்கிட்ட மனுஷன் பேசுவானா? ஓவியாவிடம் கடுப்பாகிய சக்தி

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஒரு குடும்ப உறவு கொடுக்கப்பட்டது...

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் மோகன்லால்-ஸ்ரீதேவி?

தென்னிந்திய திரையுலகின் பெருமையை உலகம் முழுவதற்கும் எடுத்து சென்ற பெருமை பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலிக்கு உண்டு. அவருடைய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படங்கள் உலகளாவிய வெற்றியை பெற்று தென்னிந்திய சினிமாவுக்கு கெளரவம் பெற்று கொடுத்தது...

விஜய் ஏன் உயர்ந்த மனிதர்? ஒரு ரசிகரின் நிஜமான, நெகிழ்ச்சியான அனுபவம்

இளையதளபதி விஜய் கிட்டத்தட்ட சூப்பர் ஸ்டார் நெருங்கிவிட்டார், இருப்பினும் அவரிடம் கடந்த 20 வருடங்களுக்கு முன் இருந்த எளிமை அப்படியே உள்ளது.

பாலிவுட்டில் ஒரு கூட்டமே அஜித்துக்காக காத்திருக்கின்றதாம்!

அஜித் நடித்த பல திரைப்படங்கள் தமிழில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் நல்ல வசூலை கொடுத்து வருகின்றன. குறிப்பாக தெலுங்கு மாநிலங்களிலும், கர்நாடகத்திலும் அஜித் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது