close
Choose your channels

உன்கிட்ட மனுஷன் பேசுவானா? ஓவியாவிடம் கடுப்பாகிய சக்தி

Wednesday, July 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஒரு குடும்ப உறவு கொடுக்கப்பட்டது. வையாபுரி அப்பா, கணேஷ் வெங்கட்ராமன், சக்தி என இரண்டு மகன்கள், இவர்களின் மனைவியாக நமீதா, காயத்ரி, திருமணம் ஆகாத மகனாக ஆரவ், கடைக்குட்டி ஜூலி மற்றும் ஜூலியின் தோழியாக ஓவியா என்று அவரவர் கேரக்டர் கொடுக்கப்பட்டது. இந்த வீட்டின் சமையல்காரராக சினேகன் நியமனம் செய்யப்பட்டார்.

நேற்றைய நிகழ்ச்சியில் குடும்ப உறவுகளில் எந்தவித பிரச்சனையும் தோன்றாமல் சுமூகமாக சென்ற நிலையில் இன்று அந்த குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும் போல் தெரிகிறது. இன்று வெளியான புரமோ வீடியோவில் 'இந்த் வீட்டின் பழக்கம் அவரவர் சாப்பிட்ட தட்டை அவரவரே கழுவ வேண்டும் என வீட்டின் பெரியவர் வையாபுரி கூற, அதற்கு ஓவியா, 'எங்க வீட்டுல வேலைக்காரன் தான் அந்த வேலையை செய்வார் என்று கூற அதற்கு வேலைக்காரர் சினேகன் முறைக்க என காரசாரமாக இருந்தது.

மேலும் வீட்டின் இரண்டாவது மகனான சக்தி, ஓவியாவிடம் உங்களோட வேலைகளை நீங்கள்தான் செய்ய வேண்டும் என்று கூற அதற்கு ஓவியா, என்னால முடியாது, நீ என்னவேணும்னாலும் பண்ணிகோ' என்று பதிலளிக்க, உங்கிட்ட மனுஷன் பேசுவானா? என்று கடுப்புடன் வெளியே செல்கிறார்.

எனவே இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி காரசாரமாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.