இனிமேல் ஒரே அணி தான்: பாரதிராஜாவின் வாழ்த்து செய்தி!

நடிகர் சங்கம் தேர்தல் நேரத்தில் இரண்டு அணிகளாக போட்டியிட்டாலும் தேர்தல் முடிந்த பின்னர் ஒரே அணியாக தான் செயல்பட வேண்டும் என இயக்குனர் இமயம் பாரதிராஜா தெரிவித்துள்ளார் .

பிரபல இயக்குனரும் இயக்குனர் சங்க தலைவருமான பாரதிராஜா நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணிக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளாக, செயற்குழு உறுப்பினராக பதவி ஏற்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தேர்தலில் களம் கண்ட இரண்டு அணிகளில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் களத்தில் எதிர் எதிர் துருவங்களாக பணிபுரிந்தாலும் தென்னிந்திய நடிகர் சங்கம் என வரும் போது அனைவரும் ஓரணி தான். இனிவரும் காலங்களில் நடிகர்கள் அனைவருமே பெருமைப்படும் வகையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பணிகள் இருக்க வேண்டும்.

நிர்வாகிகள் இல்லாமல் நின்று போன நடிகர் சங்கத்தின் பணிகள் விரைவில் தொடங்க வாழ்த்துக்கள். இன்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்கும் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பூச்சிமுருகன், கருணாஸ் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு இயக்குனர் பாரதிராஜா அந்த வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

More News

'மன்மத லீலை' கில்மா படமா? வெங்கட்பிரபு விளக்கம்!

'மாநாடு' படத்தை அடுத்து இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய 'மன்மத லீலை' திரைப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியானது.

அஜித்-ஷாலினியின் செம ரொமான்ஸ் புகைப்படத்தை பகிர்ந்த ஷாம்லி!

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான அஜித் ஷாலினியின் செம ரொமான்ஸ் புகைப்படத்தை ஷாலினியின் சகோதரி ஷாமிலி தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில்

ஐஸ்வர்யா ரஜினிக்கு கிடைத்த அன்பான முத்தங்கள்: வைரல் புகைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு அவரது இரண்டு மகன்கள் கொடுக்கும் அன்பான முத்தம் குறித்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள

5 லட்சம் கொடுத்தால் 500 கோடி: கோடிக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த தமிழ் ஹீரோ

தமிழ் திரைப்பட ஹீரோ ஒருவர் இரிடியம் மோசடி கும்பலிடம் கோடிக்கணக்கில் பணத்தை இழந்ததை அடுத்து அவர் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

அதிரடி ஆக்சன் காட்சிகளில் டூப் இன்றி நடித்த சமந்தா! 

பிரபல நடிகை சமந்தா அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் டூப் இன்றி நடித்ததாகவும் அவருக்கு ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் பயிற்சி அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன