இனிமேல் ஒரே அணி தான்: பாரதிராஜாவின் வாழ்த்து செய்தி!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் சங்கம் தேர்தல் நேரத்தில் இரண்டு அணிகளாக போட்டியிட்டாலும் தேர்தல் முடிந்த பின்னர் ஒரே அணியாக தான் செயல்பட வேண்டும் என இயக்குனர் இமயம் பாரதிராஜா தெரிவித்துள்ளார் .
பிரபல இயக்குனரும் இயக்குனர் சங்க தலைவருமான பாரதிராஜா நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணிக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளாக, செயற்குழு உறுப்பினராக பதவி ஏற்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தேர்தலில் களம் கண்ட இரண்டு அணிகளில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் களத்தில் எதிர் எதிர் துருவங்களாக பணிபுரிந்தாலும் தென்னிந்திய நடிகர் சங்கம் என வரும் போது அனைவரும் ஓரணி தான். இனிவரும் காலங்களில் நடிகர்கள் அனைவருமே பெருமைப்படும் வகையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பணிகள் இருக்க வேண்டும்.
நிர்வாகிகள் இல்லாமல் நின்று போன நடிகர் சங்கத்தின் பணிகள் விரைவில் தொடங்க வாழ்த்துக்கள். இன்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்கும் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பூச்சிமுருகன், கருணாஸ் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு இயக்குனர் பாரதிராஜா அந்த வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments