பிக்பாஸ்: பைத்தியங்களாக மாறும் பங்கேற்பாளர்கள்

  • IndiaGlitz, [Tuesday,August 01 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பார்வையாளர்களுக்கு அவ்வப்போது டாஸ்க் கொடுத்து அவர்களது திறமை நிரூபிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று கொடுத்த ஒரு டாஸ்க்கில் அனைவரும் பைத்தியமாக இருப்பதாகவும் முதலில் யார் குணமாகி வெளியே செல்வது, யாருக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுப்பது, யாருக்கு அதிக மருந்து மாத்திரைகள் தேவைப்படும் என்பது குறித்து கருத்து கேட்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே இந்த டாஸ்க்கிலும் ஓவியாவை மற்ற பங்கேற்பாளர்கள் மறைமுகமாக பழிவாங்கினார்கள்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள புரமோ வீடியோ ஒன்றில் அனைவருமே பைத்தியமாக மாறிவுள்ளனர். ஒருபக்கம் காயத்ரி டான்ஸ் கற்று கொடுப்பது போலவும், இன்னொரு பக்கம் ஜூலி போராட்டம் நடத்துவது போலவும் அந்த வீடியோவில் உள்ளது. மேலும் மேக்கப் பைத்தியம் ரைசா, சினேகனுக்கு லிப்ஸ்டிக் போட்டுவிடுவது, சினேகனை ஜூலி தலை அமுக்கிவிடுவது, ஓவியாவின் தோளில் சினேகன் சாய்வது, ஆரவ்வின் முதுகில் சினேகன் ஏறி குதிப்பது, சக்தி பலூன் ஊத, இவர்களை அடக்கும் டாக்டராக வையாபுரியும் இருப்பதாக அந்த வீடியோவில் தெரிகிறது.

பைத்தியமாக நடிக்கும் இந்த டாஸ்க்கிலும் பங்கேற்பாளர்கள் தங்கள் உண்மையான சுயரூபத்தை வெளிப்படுத்துவார்களா? என்பதை இன்று இரவு வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

அஜித் வழிவிட்டதால் ஆகஸ்ட் 11-ல் குவியும் படங்கள்

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கிய 'விவேகம்' திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்றுதான் கடந்த சில மாதங்களாகவே கூறப்பட்டது. எனவே இந்த தேதியில் 'தரமணி' தவிர மற்ற எந்த படமும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை...

ஃபெப்சி-தயாரிப்பாளர் சங்க மோதல் எதிரொலி: 'காலா', 'மெர்சல்' படப்பிடிப்பு ரத்து

கடந்த சில நாட்களாகவே தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் ஃபெப்சி சங்கத்தினர்களுக்கும் இடையே அறிக்கை போர் நடந்து வருகிறது. இதன் உச்சகட்டமாக ஃபெப்சி தொழிலாளர்கள் இல்லாமலும் படப்பிடிப்பு நடைபெறும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் அதிரடி அறிக்கை ஒன்றும் வெளியானது...

ஜூலியை வெளியே அனுப்ப விரும்பும் ஸ்ருதிஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதலில் ஜூலி வந்தபோது, நெட்டிசன்கள் அவருக்கு அமோக ஆதரவு அளித்தனர். ஜூலையை ஃபேக் ஃபேக் என்று கூறியதால் தான் ஆர்த்தியை ரசிகர்கள் வெளியே அனுப்பினர்....

குழந்தைகளுக்காக தளபதி விஜய் ஏற்று நடித்த ரோல்: மெர்சலான ரூபன்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் விஜய்யின் ரோல்கள் குறித்து எடிட்டர் ரூபன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மெர்சலின் மெலடி பாடல் பல வருடங்களுக்கு பேசப்படும்: எடிட்டர் ரூபன்

விஜய் முதன்முதலாக மூன்று வேடங்களில் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் குறித்து பல ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது...