close
Choose your channels

ஃபெப்சி-தயாரிப்பாளர் சங்க மோதல் எதிரொலி: 'காலா', 'மெர்சல்' படப்பிடிப்பு ரத்து

Tuesday, August 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாகவே தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் ஃபெப்சி சங்கத்தினர்களுக்கும் இடையே அறிக்கை போர் நடந்து வருகிறது. இதன் உச்சகட்டமாக ஃபெப்சி தொழிலாளர்கள் இல்லாமலும் படப்பிடிப்பு நடைபெறும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் அதிரடி அறிக்கை ஒன்றும் வெளியானது.

இந்த நிலையில் ஃபெப்சி தொழிலாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்தனர். இந்த வேலை நிறுத்தத்தால் சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா, தளபதி விஜய்யின் மெர்சல் ஆகிய படங்களின் படப்பிடிப்பு உள்பட ஒருசில படங்களின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஃபெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் குறித்து கருத்து கூறிய பிரகாஷ்ராஜ், 'ஃபெப்சி தொழிலாளர்களுடன் பணியாற்றுவதில் எந்த பிரச்னையும் இல்லை, கொள்ளையடிக்காதீர்கள் என்று தான் கேட்கிறோம் என்று கூறிய அவர், ஆர்.கே.செல்வமணி அவர்கள் இந்த பிரச்சனை தீர உண்மையாகவே நல்லவிதமாக செயல்படுகிறார். ஆனால் அவரையும் மீறி சில விஷயங்கள் நடப்பது வருத்தத்தை தருகிறது என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.