close
Choose your channels

பிக்பாஸ் அக்ஷராவுக்கு அண்ணன் கொடுத்த அன்பு பரிசு… வைரலாகும் புகைப்படம்!

Tuesday, January 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பரப்பாக ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றவர் நடிகை அக்ஷரா. 80 நாட்களில் எலிமினேட் ஆகி பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேவந்த இவருக்கு, அவருடைய அண்ணன் கொடுத்த அன்பு பரிசு தற்போது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் துவங்கப்பட்டது. அந்தப் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களுள் ஒருவராகக் கலந்து கொண்டு திறமையாக விளையாடியவர்தான் நடிகை அக்ஷரா. பிக்பாஸ் டாஸ்க் அனைத்திலும் ஆர்வத்துடன் பங்குகொண்ட இவர் 80 நாட்களில் குறைந்த வாக்குகளைப் பெற்று வீட்டைவிட்டு வெளியே வந்தார். கூடவே டபுள் எவிக்சன் முறையில் மற்றொரு போட்டியாளரான வருணும் இவருடன் சேர்ந்து வெளியேறினார். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியை வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த வருண் மற்றும் அக்ஷராவிற்கு புதிய பட வாய்ப்பு வந்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியாக நிலையில் நடிகை அக்ஷரா, சகப் போட்டியாளர்களான வருண் மற்றும் சஞ்சீவை நேரில் சந்தித்து தனது பாசத்தைப் பரிமாறிக்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அக்ஷராவிற்கு அவருடைய அண்ணன் பென்ஸ் கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தக் காரின் மீது அக்ஷரா அமர்ந்திருக்கும் புகைப்படம்தான் தற்போது சோஷியல் மிடியாவில் வைரலாகி வருகிறது. பென்ஸ் வகை சொகுசு காரான அதன் விலை ரூ.1 கோடி என்றும் சொல்லப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியைவிட்டு எலிமினேட் முறையில் வெளியேவந்த அக்ஷராவிற்கு புதிய கார் மற்றும் புதிய பட வாய்ப்புகள் கிடைத்திருப்பதால் அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.