விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ஓவியா? பிக்பாஸ் கொடுத்த வெகுமதி

  • IndiaGlitz, [Wednesday,August 09 2017]

பத்து படங்களில் நடித்தாலும் பெற முடியாத புகழை ஒருசில நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியா பெற்றார் என்பது தெரிந்ததே. இதுவரை எந்த நடிகைக்கும் ஆர்மி, புரட்சிப்படை ஆகியவை தோன்றியதாக வரலாறு இல்லை. முதல்முதலாக ஓவியாவுக்கு குவிந்த ரசிகர்களின் கூட்டம் தானா சேர்ந்த கூட்டம். மேலும் முதல்முறையாக ரசிகர்கள் ஒரு நடிகையின் உள்ளழகையும், உண்மையையும் ரசித்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் மன அழுத்தம் காரணமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஓவியாவுக்கு பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவுள்ள 'விஜய் 62' படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஓவியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் உண்மையானால் ஓவியா ஆர்மியினர்களுக்கு இதைவிட வேறு சந்தோஷமான விஷயம் இருக்க முடியாது. பிக்பாஸ் நிகழ்ச்சியால் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டாலும், அவருக்கு மிகப்பெரிய எதிர்காலத்தை கொடுத்ததும் அதே பிக்பாஸ் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'விவேகம்', 'மெர்சல்', 'வேலைக்காரன்' சாட்டிலைட் உரிமை விபரங்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் சாட்டிலைட் டிவிக்களின் நிர்வாகத்தினர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்துவேறுபாடுகள் இருந்த நிலையில் பெரிய ஸ்டார்கள் படங்களின் சாட்டிலைட் உரிமை கூட விற்பனை ஆகாமல் இருந்தது

ஓவியா எங்கே?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கான உள்ளங்களை கொள்ளை கொண்ட ஓவியா, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி பிக்பாஸ் வீட்டை விட்டே கடந்த வாஅரம் வெளியேறினார்

வேலூர் மாநகராட்சி ஆணையர் திடீர் கைது

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே ஊழலுக்கு எதிரான நபர்கள் மீது கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருவது தெரிந்ததே...

சிவகார்த்திகேயனின் அடுத்த பட இயக்குனர் குறித்த தகவல்

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

அப்படி போடு அறுவால! மெர்சல் அறிவிப்பு குறித்து பிரபல நடிகர்

தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்தின் புதிய போஸ்டர் சற்று முன் வெளியாகி சமூக வலைத்தளங்களில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் நிலையில் இந்த போஸ்டருக்கு பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்...