மக்களை சந்திக்கும் ஆரி: எங்கே, எப்போது? முழு விபரங்கள்!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியிலும் ஆரி கலந்து கொண்டதை அடுத்து தற்போது அவர் முதன்முதலாக தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர் மக்களை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதுகுறித்த தகவலை நேற்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இதன் முழு விவரங்கள் வெளியாகியுள்ளன.

‘மக்களுக்கு முதல் வணக்கம்’ என்ற நிகழ்ச்சியில் ஆரி அர்ஜுனன் கலந்துகொள்ளவுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முதலாக மக்களை ஆரி நேரில் சந்திக்கும் இந்த நிகழ்ச்சி பிப்ரவரி 21ஆம் தேதி ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான மால் ஒன்றில் நடைபெற உள்ளது. மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் என்பதால் யார் வேண்டுமானாலும் இந்த நிகழ்ச்சிக்கு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஈரோடு மகேஷ் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

More News

அமேசான் ப்ரைமில் சூப்பர் சாதனை செய்த சூரரை போற்று!

சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் கடந்த ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி அமேசான் ஓடிடியில் 'சூரரைப்போற்று' திரைப்படம் வெளியானது.

80களின் பிரபலங்களுடன் பிக்பாஸ் சுரேஷ் தாத்தா: வைரல் புகைப்படம்

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் சுவராசியமான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்று முன் அவர் ஒரு புகைப்படத்தை

சென்னை மெட்ரோவில் பணியாற்றும் திருநங்கைகள்… புது திருப்பத்தை ஏற்படுத்தும் வைரல் வீடியோ!

ஒரு காலத்தில் திருநங்கைகளைப் பார்த்தாலே வெறுப்பை கொட்டும் தமிழ்ச் சமூகம் இன்றைக்கு நவீனக் கருத்துக்களாலும் சினிமாவின் தாக்கத்தாலும் ஓரளவு முன்னேற்றம் கண்டு இருக்கிறது.

என்னன்னு கெஸ் பண்ணுங்க பார்க்கலாம்? எருமைச்சாணி ஹரிஜாவின் வைரல் புகைப்படம்!

எருமை சாணி என்ற யூடியூப் சேனல் மூலம் புகழ்பெற்ற ஹரிஜா. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து 'என்னவென்று கெஸ் பண்ணுங்கள் பார்க்கலாம்' என்று கூறியிருப்பது

கூடங்குளம், சிஏஏ, கொரோனா விதிமுறை மீறல் வழக்குகள் குறித்து தமிழக முதல்வர் எடுத்த அதிரடி முடிவு!

கொரோனா பரவல் காலத்தில் விதிமுறைகளை மீறியதாகப் பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.