close
Choose your channels

மக்களை சந்திக்கும் ஆரி: எங்கே, எப்போது? முழு விபரங்கள்!

Friday, February 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியிலும் ஆரி கலந்து கொண்டதை அடுத்து தற்போது அவர் முதன்முதலாக தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர் மக்களை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதுகுறித்த தகவலை நேற்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இதன் முழு விவரங்கள் வெளியாகியுள்ளன.

‘மக்களுக்கு முதல் வணக்கம்’ என்ற நிகழ்ச்சியில் ஆரி அர்ஜுனன் கலந்துகொள்ளவுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முதலாக மக்களை ஆரி நேரில் சந்திக்கும் இந்த நிகழ்ச்சி பிப்ரவரி 21ஆம் தேதி ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான மால் ஒன்றில் நடைபெற உள்ளது. மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் என்பதால் யார் வேண்டுமானாலும் இந்த நிகழ்ச்சிக்கு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஈரோடு மகேஷ் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.