பிக்பாஸ் முடிந்தும் நிஷாவை விடாத ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Thursday,January 21 2021]

105 நாட்களாக மக்களின் அமோக வரவேற்பை பெற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த நிகழ்ச்சியின் வின்னராக அனைவரும் எதிர்பார்த்தபடியே ஆரி தேர்வு செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே

ஆரியின் வெற்றியை உலகில் உள்ள தமிழர்கள் பெரும்பாலானோர் கொண்டாடிய நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சக போட்டியாளர்கள் ஒரு சிலருக்கு மட்டும் அதிருப்தியாக இருந்தது என்பது ஆரி கோப்பையை வாங்கியபோது அவர்களது முக பாவனையில் இருந்தது தெரியவந்தது

குறிப்பாக அன்பு குரூப்பில் இருந்து 6 பேரும் ஆரியின் வெற்றியை ரசிக்கவில்லை என்பது அவர்கள் பிக்பாஸ் மேடையில் இருந்த போது அவர்களது முகமே காட்டி கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் சனம்ஷெட்டி மற்றும் அனிதா ஆகிய இருவரும் ஆரி வெற்றியாளர் என்று அறிவித்தவுடன் எழுந்து நின்று சந்தோசமாக கைதட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆரி கோப்பையை வென்று நான்கு நாட்கள் கழித்து நிஷா தனது வாழ்த்துக்களை ஆரிக்கு சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். ’இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என்று ஆரிக்கு நிஷா வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் ஒரு நெட்டிசன், ‘சும்மா நடிக்காதே ஆரி ப்ரோ டைட்டில் வாங்கும்போது உன் முகம் எப்படி இருந்தது என்று பார்த்தோம்’ என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த நிஷா, ‘அது போலி’ என்று தெரிவித்துள்ளார். பிக்பாஸ் முடிந்தும் நிஷாவை சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் விடாமல் துரத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

நடராஜனை வரவேற்க அமைக்கப்பட்டிருந்த மேடை அகற்றம்! சுகாதாரத்துறை அதிரடி

தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் கடந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அபாரமாக பந்து வீசியதல், ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் நெட் பவுலராக பங்கேற்றார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!

ஆக்ஸ்ட்போர்ட் பல்கலைக் கழகம் கண்டுபிடித்த கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியை தயாரித்து விற்பனை செய்து வருகிறது இந்தியாவின் சீரம் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி.

மெகா ஸ்டார் நடிகருடன் இணையும் தனி ஒருவன் இயக்குநர்…  அசத்தல் வீடியோ!

தமிழில் ஜெயம் ரவி நடித்த “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி“, “சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்“,

தெறிக்கவிடும் ஃபுட் சேலஞ்ச்… வாடிக்கையாளர்களை ஈர்க்க புது ஐடியா!

பூனேவில் உள்ள அசைவ உணவகம் கொரோனாவிற்கு பிறகு குறைந்து போன பிசினஸை அதிகப்படுத்த ஒரு விசித்திரமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

பள்ளி சென்ற 12ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா: அதிர்ச்சியில் சக மாணவிகள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்