close
Choose your channels

குழந்தை பெத்து வளர்க்க முடியலைன்னா ஏன் பெத்துக்கிறீங்க: பாலாஜி முருகதாஸ் உருக்கம்

Friday, October 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி முதல் ஒரு நாள் மட்டுமே அறந்தாங்கி நிஷாவின் காமெடியால் கலகலப்பாக சென்றது. அதற்கு அடுத்த நாளிலிருந்து சொந்த கதை, சோக கதை சொல்லும் படலம் தொடங்கியது. இதனால் சண்டை சச்சரவு பாதி, சோகக்கதை பாதி என என மாறி மாறி நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது

இந்த நிலையில் இன்றைய மூன்றாவது புரோமோவில் பாலாஜி முருகதாஸ் தனது சோகக் கதையைக் கூறுகிறார். தன்னுடைய தந்தையும் தாயும் தன்னை சரியாக வளர்க்கவில்லை என்றும், பள்ளியில் சேர்த்ததோடு சரி, அதன் பிறகு தன்னை அவர்கள் கவனிக்கவில்லை என்றும் உருக்கமாக கூறுகிறார்

உங்களால் ஒரு குழந்தையைப் பெற்று சரியாக வளர்க்க முடியவில்லை என்றால் ஏன் குழந்தை பெற்றுக் கொள்கிறீர்கள் என்று சில தவறான பெற்றோர்களுக்கு செருப்படி தரும் வகையில் அவரது பேச்சு அமைந்தது

பாலாஜி முருகதாஸ் உருக்கமாக தனது பெற்றோர் குறித்து கூறியதை அடுத்து அவருக்கு சக போட்டியாளர்கள் ஆறுதல் கூறுவதுடன் இன்றைய மூன்றாவது புரமோ முடிந்துள்ளது. மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சியில் ரேகா-சனம் சண்டை மற்றும் பாலாஜியின் சோகக்கதை ஆகியவை கலந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.