close
Choose your channels

பிப்ரவரி 14, நமக்கு மட்டும் இப்படியா? பிக்பாஸ் பாலாஜி புலம்பல்!

Thursday, February 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரியும், இரண்டாவது இடத்தை பாலாஜியும் பிடித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டும் தங்களது நட்பை புதுப்பித்துக் கொண்டும் உள்ளனர். அதேபோல் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது சில கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் காதலர்களால் கொண்டாடப்பட உள்ளதை அடுத்து தற்போதே காதலர் தின ஹேஷ்டாக்குகள் வைரலாக தொடங்கி விட்டன. இந்த நிலையில் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ’பிப்ரவரி 14ஆம் தேதி எல்லாருக்கும் காதலர் தினம், ஆனால் நமக்கு மட்டும்தான் முரட்டு சிங்கிள் தினம்’ என்று புலம்பலுடன் ஒரு பதிவை செய்துள்ளார்

இந்த பதிவுக்கு அவருடைய கூட்டமான முரட்டு சிங்கிள் கூட்டம் ஆறுதல் கூறி வருகின்றனர். பாலாஜி முருகதாஸின் இந்த டுவீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.